நிஜமனிதர்கள் கல்லாக மாறினார்களாம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 9, 2019

நிஜமனிதர்கள் கல்லாக மாறினார்களாம்!

இத்தாலியின் முக்கிய சுற்றுலா தலத்தில் அமைத்துள்ள சிலைகள் நிஜமனிதர்கள் கல்லாக மாறியதால் உருவானதாம்.

இத்தாலியில் பாம்பெய், ஹெர்குலானியம் என இரு நகரங்கள் உள்ள. இந்த இரு நகரங்களுக்கும் அருகே மவுண்ட் வெசுவியஸ் என்ற எரிமலை இருந்ததுள்ளது.

அது, எப்போதும் அமைதியாக இருந்த நிலையில் எரிமலை தீடிரென்று கி.பி. 79-ம் ஆண்டில் தன் சுயரூபத்தைக் காட்டியது. அந்த தினத்தில் அந்நகரில், பொதுமக்கள் ஒரு கொண்டாட்ட தினத்தை மகிழ்ச்சியைக் கழித்துக்கொண்டிருந்தார்கள்.

அந்நேரத்தில் தான், திடீரென எரிமலை வெடித்துச் சிதறியது. கண் இமைக்கும் நேரத்தில் பாம்பெய், ஹெர்குலானியம் நகரமெங்கும் புகை சூழந்தது.

லாவா எனப்படும் நெருப்புக் குழம்பு பெருமளவில் வழிந்தோடியது. இந்தக் கோரச் சம்பவத்தில் மக்கள் என்ன ஆனார்கள் என்றுகூடத் தெரியவில்லை. இரு நகரங்களும் நெருப்புக் குழம்பில் சிக்கி முழுமையாக மூழ்கி போகின.

இந்நியைலில், ஒரு காலகட்டத்தில் இரு நகரங்களையும் எல்லோரும் முற்றிலும் மறந்தே விட்டனர். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்ட கட்டிடக் கலை நிபுணர்கள் ஹெர்குலானியம் இருந்த இடத்துக்கு சென்றுள்ளனர்.


புதைந்திருந்த இரு நகரங்களையும் 1738-ம் ஆண்டு முழுமையாகத் தோண்டி ஆய்வு செய்தார்கள். இதில் சுமார் 12 அடுக்கு மண் படிவங்கள் இரு நகரங்களையும் மூடி மண் மேடாக்கியிருந்துள்ளது. அனைத்து உயிரினங்களையும் நெருப்பு குழம்பு மூழ்கடித்திருந்தது.

இதில் கல்லாக மாறிய மனிதர்கள் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு அந்நாட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.



குறிப்பாக ஒரு சோகமான வரலாற்றுப் பின்னணி கொண்ட அந்த இரு நகரங்களும் இப்போது முக்கியச் சுற்றுலாத் தலங்களாக உள்ளன.