ஊடக இமயம் ஒன்று சரிந்தது – (சண் தவராஜா) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

ஊடக இமயம் ஒன்று சரிந்தது – (சண் தவராஜா)

ஈழ மண்ணில் ஓர்
இமயம் சரிந்தது
இதழியல் துறையில்
இடைவெளி பிறந்தது.
வாழ்ந்தவர் மறைவது
வழக்கமே யாகினும்
இழந்தது என்னவே
ஈடிணை யற்றது.
ஆண்டுகள் ஐம்பதாய் ஆண்டவர் உண்டு
எழுதியவர் உண்டோ?
இருந்தவர் ஒருவரே – இன்று
இழந்தோம் உம்மையும்.
கோபு என்றால் கோபம்
கொஞ்சுவது அவர் சுபாவம்
குறுந்தாடி முகத்தோடு
கொண்டார் அவர் கோலம்.
எத்தனை இரவுகள்?
எத்தனை பொழுதுகள்?
அத்தனை நொடிகளும்
அமிழ்தமாய் இனித்தவை.
பேச்சிலும் சிருங்காரம்
சிரிப்பிலும் சிருங்காரம் – உன்
எழுத்தில் மட்டுமே
இருந்தது பெருங் காரம்.
சொற்சுவை, பொருட்சுவை
சொந்தமாய் வாய்த்தவை – உன்
பொக்கைவாய் திறந்தால்
மொத்தமும் அருஞ்சுவை
மட்டிலே பிறந்து – யாழ்
மண்ணிலே தடம் பதித்து
தலைவன் கையால் பரிசு பெற
தலை நிமிர்ந்தோம் நாமும்
தமிழை நீ வளர்த்தாய்
தமிழ் உன்னால் வளர்ந்தது – அந்தத்
தமிழ் தள்ளாடும் காலத்திலே
நீ காணாமல் போனதேனோ?
உன் நினைவால் வாடுகிறோம்
உன் பிரிவால் ஏங்குகிறோம்
எம் இதயத்து நினைவுகளை
இதழ் கொண்டு தூவுகிறோம்.

சிவராம் ஞாபகார்த்த மன்றம், சுவிஸ்