கதிரவன் காலமெல்லாம் காவியம் படைத்திட பிராத்திக்கின்றேன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 16, 2019

கதிரவன் காலமெல்லாம் காவியம் படைத்திட பிராத்திக்கின்றேன்


கதிரவனே கலைமகளின் தலைமகனே

தமிழ் உலகின் உயர்ந்த ஒளி நாதமே

திமிராய் திசையெட்டும் உள்ள உன்மைகளை

திரண்டெடுத்து தித்திப்பாய் தமிழர் மனஙகளில் தினித்திடும்

தீரனாய் திகழும் எம் கதிரவனே வாழ்க பல ஆயிரம் ஆண்டு

ஈரைந்து ஆண்டுகள் இறுமாப்போடு இழுத்து வந்தாய்

இதமான செய்திகளை இருட்டடிப்பை தவிர்த்தாய்

இதனால் இழந்தாய் இருட்டடிப்பாளர்களை

இதயமுள்ளோர் இன்புற்றனர் இணைந்தனர்

ஈடுஇணையில்லா வாசகர்கள் பலர்

வீட்டுக்கொரு இணையத்தளமாய் விளம்பர பக்கஙகளோடு பல பாரினில்

பக்கஙகளில் நீ பலதும் பத்துமாய் பல் சுவையாய் பாரினில் பாதை வகுத்தாய்

பகுத்தறிவா பாலகர் பாமாலையா மங கையர் மலரா மானிடர் ஆரோக்கியமா

மட்டுப்படுத்தப்பட்ட மன்மத விளக்கமா வி\ஞ்ஞனமாஅஞ்ஞனமா ஆன்மீகமா

அனைத்தினையும் அள்ளித்தருபவன்நீ ஆயிரம் வருடம் ஒளிவீசுவாய்

ஆண்டதமிழன் கண்ட நூல்கள் ஆயிரம் நாம் கண்ட காலத்தில்

களத்தோடு கதை சொன்ன செய்தித்தாள்கள் சில

சுதந்திரன் ஈழநாடு உதயனோடு உன்னையும் நான் இணைத்திட்டேன்

கதிரவனே நீயும் களத்தோடு நின்றாய் காவுகொண்டவர் காவியம் சொன்னாய்

கன்னிவெடியோடு களம் கண்ட கன்னியர் கதை சொன்னாய்

களத்தில் நின்றவர் நிஜத்தை நிலத்திலும் புலத்திலும் சொன்னாய்

நித்தம் நினைவுகளை சொல்ல கதிரவனே நீ வாழ வேண்டும் ஓராயிரம் ஆண்டு

ஈரைந்து மாதம் கருப்பையில் கருவிற்கு சுகமான சுகம்

ஈரைந்து மாதம் கருவை சுமந்த தாய்க்கு சுகமான சுமை

ஈரைந்து வருடம் கதிரவனை சுமந்த தாயின் சுமையோ

சுகமான சுமையாய் சுவைபெற சுற்றும் பூமியோடு

நாமும் சுழன்று சுவைத்திடுவோம் கதிரவனை நாமும்

கதிரவன் பல்லாண்டு காலம் உலகத்தமிழர்களின்

மனஙகளில் நிலைத்திட இறைவனை பிராத்திப்போம்!!!

அன்போடு அரியபுத்திரன் நிமலன்