மாஸ்க் அணிய சொன்ன சுகாதார அதிகாரி மீது சரமாரி தாக்குதல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 23, 2021

மாஸ்க் அணிய சொன்ன சுகாதார அதிகாரி மீது சரமாரி தாக்குதல்!

 நுவரெலியா நகராட்சி மன்றத்தின் சுகாதார மேற்பார்வையாளர் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் ஊழியர்கள் குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.



வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் போது முகக்கவசம் அணியுமாறு உணவக ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து சுகாதார அதிகாரி தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


புத்தாண்டு பண்டிகை காலப்பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களை மீள அழைக்கும் நடவடிக்கை