இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா ( Oxford Astra - Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதலாவது தடுப்பூசி இராணுவத்தினர் மூவருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் 5 வைத்தியசாலைகளில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.