மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் சட்டவிரோமாக மறைத்து வைக்கப்பட்டிருந்து பெருமளவிலான வெடிபொருட்களை இன்று ஞாயிற்றுக்கிழமை (03) மீட்டுள்ளதுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி,கே. பண்டார தெரிவித்தார்.
மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் சுவோத தலைமையில் கீழ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் புருசோத்தமன், ஆகியோரின் தகவலுக்கமைய பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர் குமதரசிறி ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி,கே. பண்டார தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) கரடியனாறு பதுளைவீதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோகிராம் அமோனியா, ஜெலனைட் குச்சி 729, சோவா வயர் 6 ஆயிரம் அடி, முலைவெடி 31, கரியம். 500 கிராம் என்பவற்றை முpட்டதுடன் ஒருவரை கைது செய்தனர் .