வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 5 ஆயிரத்து 358 பேர் பாதிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 15, 2021

வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 5 ஆயிரத்து 358 பேர் பாதிப்பு!

 வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் ஆயிரத்து 672 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


யாழ். மாவட்டத்தில் 558 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 745 பேரும், மன்னார் மாவட்டத்தில் 233 குடும்பங்களை சேர்ந்த 839 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 807 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 600 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 74 குடும்பங்களை சேர்ந்த 174 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



அத்துடன், கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால் 5 ஆயிரத்து 137 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்து 387 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 164 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 750 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 289 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால் 7 ஆயிரத்து 187 குடும்பங்களை சேர்ந்த 23 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.