பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியானது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, October 22, 2020

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியானது!

 தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.


அதன்படி பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்து வந்த தடையை நீக்கி பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கானது திறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது.

திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பை பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்க்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.

இரகசிய விசாரணை போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony. ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டவாளராக வாதிட்டிருந்தார்.

எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபடவில்லை எனச்சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2018ம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.

இதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organizations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.

விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் இடையூறாக இருக்கின்றதென வாதிட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சுதந்திர அரசின் வடிவத்தில் பிரயோகிப்பதற்கு தடையாக உள்ளதோடு, சுதந்திர தமிழீழத்தினை இலக்காக கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயக ரீதியாக செயற்பாடுகளுக்கும் பெருந்தடையாக இது இருக்கின்றதென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் சட்டத்தரணிகள் வாதிட்டிருந்தனர்.