வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
நாட்டில் கொரோனா நெருக்கடி காரணமாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உற்சவத்தினை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆலயத்திற்கு வருகைதந்த அடியவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார்கள்.
ஆலயத்தின் உட்புறத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அடியார்கள் அனுமதிக்கப்பட்டதோடு சமூக இடைவெளியைப் பின்பற்றக்கூடியவாறு ஆலய நிர்வாகத்தினரால் மக்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேபோல், ஆலயத்திற்கு வெளியிலும் பொலிஸாரினால் சமூக இடைவெளியைப் பின்பற்றி ஆலய உற்சவத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை கொண்டுவராதவர்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
எனினும், வழமைக்கு மாறாக இம்முறை பலத்த கட்டுப்பாடுகளுடன் ஆலய உற்சவத்திற்கு பெருமளவில் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். பாதுகாப்புக் கடமையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்களை சோதனைச் சாவடிகளில் சோதனையிடும் நடவடிக்கையினை பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்கள் மேற்கொண்டனர்.
![](https://athavannews.com/wp-content/uploads/2020/07/Nallur-Festival-2020-1st-Day-Kodiyetram-2.jpeg)
![](https://athavannews.com/wp-content/uploads/2020/07/Nallur-Festival-2020-1st-Day-Kodiyetram-1.jpeg)
![](https://athavannews.com/wp-content/uploads/2020/07/Nallur-Festival-2020-1st-Day-Kodiyetram-6.jpeg)
![](https://athavannews.com/wp-content/uploads/2020/07/Nallur-Festival-2020-1st-Day-Kodiyetram-4.jpeg)
![](https://athavannews.com/wp-content/uploads/2020/07/Nallur-Festival-2020-1st-Day-Kodiyetram-9.jpeg)
![](https://athavannews.com/wp-content/uploads/2020/07/Nallur-Festival-2020-1st-Day-Kodiyetram-3.jpeg)
![](https://athavannews.com/wp-content/uploads/2020/07/Nallur-Festival-2020-1st-Day-Kodiyetram-7.jpeg)
![](https://athavannews.com/wp-content/uploads/2020/07/Nallur-Festival-2020-1st-Day-Kodiyetram-5.jpeg)