யாழில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றையதின இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே தொற்று உறுதி செய்யப்பட்டதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
நாளாந்த கொரோனா புள்ளிவிபரம் குறித்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நேற்று 64 பேருக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவருக்கே இவ்வாறு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.