யாழ் கோண்டாவிலில் அதிகாலை இராணுவ சுற்றிவளைப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 7, 2020

யாழ் கோண்டாவிலில் அதிகாலை இராணுவ சுற்றிவளைப்பு!


கோண்டாவில் காரைக்கால் பகுதி இன்று அதிகாலை தொடக்கம் சிறிலங்கா இராணுவத்தினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோண்டாவில் காரைக்கால் பகுதியில் இன்று அதிகாலை தொடக்கம் இராணுவம் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஏராளமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீடு வீடாக தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


இதேவேளை அண்மைய நாட்களாக அப்பகுதியில் வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.