சற்று முன் கொழும்பை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பலி – இலங்கையில் கொரானா பலி எண்ணிக்கை 9 ஆனது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 5, 2020

சற்று முன் கொழும்பை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பலி – இலங்கையில் கொரானா பலி எண்ணிக்கை 9 ஆனது

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 52 வயதுடைய கொழும்பு 15 ஐ சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.