வவுனியாவில் உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் கொரோனோ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 1, 2020

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் கொரோனோ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக தெற்கிலுப்பைக்குளத்தில் இருந்து 56 வயதுடைய கலாராணி என்ற பொண்ணொருவர் கொண்டுவரப்பட்டிருந்தார்.
அவருக்கு வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உடனடி மருத்துவ சேவையினை வழங்கியபோதிலும் சிகிச்சை பலனின்றி இன்று(வியாழக்கிழமை) காலை குறித்த பெண் மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண் கொரோனாவினால் மரணமடைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.