கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை எங்கள் விவசாய நிலத்தில் புதையுங்கள்: மோடிக்கு கடிதமெழுதிய மாணவி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 25, 2020

கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை எங்கள் விவசாய நிலத்தில் புதையுங்கள்: மோடிக்கு கடிதமெழுதிய மாணவி!

கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய நிலம் தர தயார் என்று இந்திய பிரதமருக்கு வாடிப்பட்டி மாணவி கடிதம் எழுதியுள்ளார்.
வாடிப்பட்டி ஒன்றியம், கச்சைக்கட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவரது மகள் தென்னரசி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை சிறு குறு விவசாயி. அவருக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர், துப்புரவு பணியாளர்கள் யாரேனும் மரணம் அடைந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்ய எங்கள் நிலத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாணவி கடிதத்தில் கூறியுள்ளார்.