![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeQV0_qS19Fg8S_kBaNY5m_WdH7drF2b03E_nB_hIV91ykK14fo7DY7yRjBemnp7AM-uUI0faH4Dvd4oEcAVoIy_rx5MnbfG4-ufFdM7ya_cLxhe1kC7GiQo4mzGtYa5mtSA_RT-94DpA/s320/st-768x524.jpg)
வாடிப்பட்டி ஒன்றியம், கச்சைக்கட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவரது மகள் தென்னரசி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை சிறு குறு விவசாயி. அவருக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர், துப்புரவு பணியாளர்கள் யாரேனும் மரணம் அடைந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்ய எங்கள் நிலத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாணவி கடிதத்தில் கூறியுள்ளார்.