காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை: மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 5, 2020

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை: மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம்

ஹெரோயின் வாங்­கு­வ­தற்­காக உற­வினர் வீட்­டி­லி­ருந்து சுமார் 3 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகைகள் உள்­ளிட்ட பொருட்­களைத் திரு­டி­ய­தாகக் கூறப்­படும் யுவ­தியை நேற்று முன்­தினம் கைது செய்­துள்­ள­தாக வென்­னப்­புவ பொலிஸார் தெரி­வித்­தனர். லுணு­வில, சிறி­கம்­பள பிர­தே­சத்தைச் சேர்ந்த 24 வய­து­டைய யுவ­தியே கைது செய்­யப்­பட்­ட­வ­ரா வார்.

சந்­தேக நப­ரான யுவதி தனது பாட்­டியின் வீட்­டி­லி­ருந்து இரண்டு பவுண் எடை­யு­டைய தங்கச் சங்­கிலி, பென்டன், கைப்­பேசி, கைக்­க­டி­காரம் போன்­ற­வற்றைத் திருடிச் சென்­றுள்­ளமை தொடர்பில் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார். இந்த முறைப்­பாடு தொடர்பில் விசா­ர­ணை­­களை மேற்­கொண்ட பொலிஸார் யுவ­தியைக் கைது செய்­துள்­ளனர்.

தனக்கும், தனது கண­வ­ருக்கும் ஹெரோயின் வாங்­கு­வ­தற்­காக பணத் தைப் பெற்றுக் கொள்ளும் நோக்­கி­லேயே இவ்­வாறு திருட்டில் ஈடு­பட்­டுள்­ள­தாக பொலி­ஸா­ரிடம் அவர் தெரி­வித்­துள்ளார்.

சந்­தேக நப­ரான யுவ­தி­யினால் திரு­டப்­பட்ட தங்க நகைகள் வென்­னப்­புவ நகரில் நகைக் கடை ஒன்றில் விற்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து நகைக் கடை உரி­மை­யா­ளரும், குறித்த யுவ­தியின் கண­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

கைது செய்­யப்­பட்ட யுவ­தி­யுடன் மற்­றைய இரு­வ­ரையும் மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்த வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்