4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பினர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 26, 2020

4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் நான்கு தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 102 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் ஏழு பேர் பூரண குணமடைந்துள்ளார்கள்.

அதேவேளை நோய் தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் 255 பேர் உள்ளார்கள்.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் இறப்புக்கள் எதுவும் இலங்கையில் பதிவாகவில்லை என்பதுடன் இருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.