பதிவு செய்­யப்­பட்ட கூட்­ட­ணி­யி­லேயே பொதுத்தேர்தலை சந்­திப்போம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, February 16, 2020

பதிவு செய்­யப்­பட்ட கூட்­ட­ணி­யி­லேயே பொதுத்தேர்தலை சந்­திப்போம்!

தேர்­தலில் சின்னம், இதயம், யானை என்ற இரண்டும் இல்லை என்றால், "அன்­னப்­ப­றவை" யை ஏற்­றுக்­கொள்வோம். ஆனால், தேர்­தலை பதிவு செய்­யப்­பட்ட கூட்­ட­ணி­யி­லேயே சந்­திப்போம்.

கூட்­டணி தலை­வ­ராக சஜித் பிரே­ம­தா­சவும், கூட்­டணி தலை­மைக்­கு­ழுவில் ஐ.தே.க. பிர­தி­நி­தி­க­ளுடன் கூட்­டணி பங்­காளிக் கட்சித் தலை­வர்­களும் இடம்­பெ­றுவோம்.

கூட்­ட­ணியின் பொதுச்­செ­ய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டா­ரவும், வேட்­பாளர் தெரி­வுக்­கு­ழுவின் தலை­வ­ராக சஜித் பிரே­ம­தா­சவும் செயற்­ப­டு­வார்கள். இவை எங்கள் குறைந்­த­பட்ச நிலைப்­பா­டுகள்.

இவற்றை ஐ.தே.க செயற்­குழு ஏற்கும் என நான் நம்­பு­கிறேன் என தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலை­வரும், கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோ கணேசன் கூறினார்.

புதிய எதி­ரணி கூட்­டணி தொடர்பில் கருத்து கூறிய மனோ எம்.பி மேலும் கூறி­ய­தா­வது,

பதிவு செய்­யப்­பட்ட கூட்­டணி, கூட்­டணி தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, தலை­மைக்­கு­ழுவில் பங்­காளிக் கட்சித் தலை­வர்கள், பொதுச்­செ­ய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டார, வேட்­பாளர் தெரி­வுக்­குழு தலைவர் சஜித் பிரே­ம­தாச ஆகிய எங்கள் குறைந்­த­பட்ச நிலைப்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டா­விட்டால்,

சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான பெரும்­பான்மை ஐ.தே.க அணி­யி­னரும், அனைத்து பங்­காளிக் கட்­சி­களும், இணைந்து நாம் ஏற்­க­னவே பதிவு செய்து, தயார் நிலையில் வைத்­தி­ருக்கும் எமது கூட்­ட­ணியின், "இதயம்", சின்­னத்தில் பொதுத் தேர்­தலை நாம் சந்­திப்போம்.

இதில் எந்­த­வித மாற்­றுக்­க­ருத்­துக்கும் இட­மில்லை. இந்த நிலைப்­பாட்­டி­லேயே சஜித் பிரே­ம­தா­சவும், அனைத்து கூட்­டணி பங்­காளிக் கட்சித் தலை­வர்­களும் இருக்­கின்றோம்.

ஐக்­கிய தேசியக் கட்சி, கூட்­ட­ணியில் பிர­தான கட்சி. அந்த கட்சி பிள­வு­ப­டக்­கூ­டாது. இதில் நாம் மிகவும் அக்­கறை கொண்­டி­ருக்­கிறோம்.

உண்­மையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பெரும்­பான்மை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், பெரும்­பான்மை முன்னாள் மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், இன்­றைய உள்­ளூ­ராட்சி மன்ற பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள், பெரும்­பான்மை கடை­நிலை உறுப்­பி­னர்கள் சஜித் அணி­யு­டன்தான் இருக்­கின்­றார்கள். நாங்­களும் அவர்­க­ளுடன் இருக்­கின்றோம்.

ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வு­ப­டக்­கூ­டாது என்ற சஜித் தலை­மை­யி­லான எமது ஒட்­டு­மொத்த நல்­லெண்­ணத்தை எவரும் எமது பல­வீ­ன­மாக கருதி எம்­முடன் விளை­யாட முய­லக்­கூ­டாது.

அப்­ப­டி­யான விளை­யாட்டு முயற்­சியில் எவரும் ஈடு­பட்டால், சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான எமது கூட்­ட­ணியின் இதயம் சின்­னத்தில் நாம் நிச்­சயம் கள­மி­றங்­குவோம். அதற்­கான எல்லா ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­ய­டைந்து விட்­டன.

பதிவு செய்­யப்­பட்ட கூட்­டணி, கூட்­டணி தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, பொதுச்­செ­ய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டார, வேட்­பாளர் தெரி­வுக்­குழு தலைவர் சஜித் பிரே­ம­தாச, என்­பவை ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு எடுத்த தீர்­மா­னங்­கள்தான்.

இன்று இவற்­றி­லி­ருந்து பின்­வாங்­கு­வது யார் என மக்­க­ளுக்கு தெரியும். எங்­க­ளுடன் முரண்­ப­டு­கின்­ற­வர்கள் யார் என மக்­க­ளுக்கு தெரியும். ஐ.தே.க பிளவுபடுமானால், அதற்கான முழு பொறுப்பை எம்முடன் முரண்படுகின்றவர்கள்தான் ஏற்க வேண்டும்.

இப்படி செய்து ஆளும் அரசாங்கத்தை மகிழ்ச்சியடைய செய்து, அரசாங்கத்துக்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்து விட வேண்டாம் என சம்பந்தப்பட்டோரை கேட்டுக்கொள்கிறேன்.