தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – ஜனாதிபதியை சந்திக்க கூட்டமைப்பு தீர்மானம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 3, 2020

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – ஜனாதிபதியை சந்திக்க கூட்டமைப்பு தீர்மானம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து பேச தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் ஜனாதிபதியை சந்தித்து இதுகுறித்து பேசவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் எதிர்கட்சி தலைவரை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேசியுள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களித்துள்ளதாகவும், அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளமை குறித்து அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.