முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் ஸ்ரீ முருகானந்தா வித்தியாலய மாணவர்கள் ,பெற்றோர்கள்  வேணாவில் கிராம மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
‘கிராம மட்ட பாடசாலைகளுக்கு வினைத்திறன் அற்ற அதிபர்களை நியமிக்காதீர்கள் எமது பாடசாலை அதிபரை உடனடியாக மாற்றம் செய்யுங்கள் ‘ என்ற கோரிக்கையை முன்வைத்துக் குறித்த  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .
பாடசாலை வாயில் முன்பாக இன்று  காலை 7 மணிக்கு ஆரம்பித்த போராட்டத்தில் மாணவர்கள் ,பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் .