அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இல்லை! கோள்கள் இணைவது பற்றி பிர்லா கோளரங்க இயக்குனர்; - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, December 25, 2019

அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இல்லை! கோள்கள் இணைவது பற்றி பிர்லா கோளரங்க இயக்குனர்;

கோள்கள் இணைவதால் பொதுமக்களுக்கு பாதிப்பா? என்பது குறித்து  பிர்லா கோளரங்க இயக்குனர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள  தகவல்..



இருக்கிற அரசியல், பொருளாதாரச் சூழலில் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது.தனிப்பட்ட மனிதனின் பக்தி இன்று பொதுமைப்படுத்தி வியாபாரமாகி விட்டது போல் தனிப்பட்ட மனிதனின் நம்பிக்கையும் பொதுமைப்படுத்தி வியாபாரமாக்கி விட்டார்கள்.அதில் மிகமுக்கியமாக செயல்படுவது ஜோதிடம்.இந்த ஜோதிடத்தால் தனி மனிதன் தன்னம்பிக்கையை இழப்பது மட்டுமல்ல மூடநம்பிக்கையில் தன்னுடைய நேரத்தையும் முயற்சியையும் பணத்தையும் விரயமாக்குகிறான்.இன்று ஜோதிடம் ஒவ்வொரு மனிதனின் வாழக்கையிலும் தவிர்க்கமுடியாத பங்களிப்பை கொடுப்பதாக இருக்கிறது.

சமீபத்தில் எல்லா ஜோதிடர்களும் சொல்லிவைத்தார்போல எழுதுவதும் பேசுவதும் ஒன்று இருக்கிறதென்றால் அது தனுசு ராசியில் 6 கிரகங்கள் ஒன்று சேரும் கோட்சார [கோள்சாரா] பலன் பற்றிதான்.

இந்த கோள்சாரா அமைப்பு 157 வருடம் கழித்து வருவதாகவும் அது கேடு விளைவிக்கக் கூடியது என்றும்,இப்படிதான் 1964 ல் டிசம்பரில் தனுஷ்கோடி ஆழிப்பேரலையில் அழிந்தது என்றும் ஆளாளுக்கு தனுஷு ராசிக்காரர்களை  பயமுறுத்தி கொண்டிருக்கிறார்கள்

சூரியன், சந்திரன், குரு, சனி, புதன், கேது ஆகிய 6 கிரகங்கள் தனுசு ராசியில் இணைந்து ராகுவின் பார்வையைப் பெறுகிறார்கள். இந்த கோள்சாரா அமைப்பு நாளை புதன்கிழமை தொடங்கி 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த அமைப்பு நெருப்புக்கும், காற்றுக்குமான மிகப்பெரும் போராட்டமான அமைப்பாக வரும் கோள்சாரா கிரக சேர்க்கையாகும்.என்று வியாக்கியானம் வேறு கொடுக்கிறார்கள்.

இதில் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு மிகவும் கலவரமாக இருக்கும் சூழ்நிலை அமையும் என்று ஜோதிடர்கள் கூறுகிறதால் தன்னை அறியாமலே தனுசு ராசியில் பிறந்தவர்கள் பலிஆடாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்    

இப்படி கோள்கள் கூடுவதால் அல்லது  இணைவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? அப்படி ஏற்படுமென்றால் அறிவியல் பூர்வமாக ஆதாரம் ஏதும் உண்டா ?  என்பதற்கு சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் சவுந்தரராஜன் பதில் தெரிவித்து உள்ளார்.
“கோள்கள், சூரியனை தங்கள் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. கெப்ளரின் 3-வது விதிப்படி சூரியன் மற்றும் கோள்கள் இருக்கும் தொலைவை பொறுத்து அது சூரியனை சுற்றிவரும் காலம் மாறுபடும். சில நேரங்களில் ஒரு கோள் மற்றொரு கோளை முந்தி செல்வதை போலவும், அருகருகே அமைந்திருப்பது போலவும் தோன்றும். உண்மையில் அவற்றிற்கு இடையே பல கோடி கிலோ மீட்டர் தூரம் விலகி உள்ளன. எனவே இதுபோன்ற கோள்கள் ஒருங்கமைவது அவ்வப்போது நிகழும்.

இது பூமியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இது ஒருங்கிணைந்த ஈர்ப்பு விசை நம்மை எந்த வகையிலும் பாதிக்காது. நிலவும், சூரியனும் ஒருங்கே அமைந்து இருப்பதால் ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் நிகழ்வது போல கடல் அலை எழுச்சி ஏற்படும்.

இது மிக அதிகமாகவோ அல்லது அழிவை உண்டாக்கும் வகையில் இருக்காது. ஆனால் வழக்கமான அமாவாசை காலங்களில் இருப்பது போல கடல் அலை எழுச்சி இருக்கும்.

இதுதவிர பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இல்லை.என்று அவர் கூறினார்.
ஆக, தனுஷ்ராசிக்காரர்கள் பயப்படாமல் தங்கள் வேலையை பாருங்கள்