வவுனியாவில் நள்ளிரவில் சுவரேறி குதித்து நிர்வாணமாக பெண்ணை கட்டிப்பிடிக்க முயன்ற காமுகனுக்கு நேர்ந்த கதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, November 9, 2019

வவுனியாவில் நள்ளிரவில் சுவரேறி குதித்து நிர்வாணமாக பெண்ணை கட்டிப்பிடிக்க முயன்ற காமுகனுக்கு நேர்ந்த கதி!

வவுனியா தேக்கங்காடு பகுதியில் நேற்றிரவு (08) 11.30 மணியளவில் வீடு புகுந்து பெண்ணை கட்டிப்பிடிக்க சென்ற அரச உத்தியோகத்தரினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டது.


வவுனியாவில் பணிபுரியும் திருகோணமலையினை சேர்ந்த அரச உத்தியோகத்தர் வவுனியா தேங்கங்காடு பகுதியில் தற்காலிகமாக வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவர் வசிக்கும் வீட்டிலிருந்து அயல் வீட்டிற்கு மதிலேறி குதித்து அங்கு வசிக்கும் 3 பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணுக்கு முன்பாக தான் அணிந்திருந்த உடைகளை கழற்றி விட்டு நிர்வானமாக கட்டி அணைக்க முயன்றுள்ளார்

இதன் போது குறித்த பெண் கூச்சலிட்டதினையடுத்த அயலவர்கள் குறித்த நபரை மடிக்கி பிடித்து தாக்குதல் மேற்கொண்டதுடன் வவுனியா பொலிஸாரிடம் கையளித்தனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த பெண் மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்