பெருந்தொகையான போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மன்னாரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து 200 கிலோ கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்