யாழில் ரௌடிகளின் தாக்குதலில் படுகாயமடைந்தவர் உயிரிழந்தார்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 1, 2019

யாழில் ரௌடிகளின் தாக்குதலில் படுகாயமடைந்தவர் உயிரிழந்தார்!

யாழிலி ரௌடிகளின் தாக்குதலுக்கு உள்ளான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி நேற்று (30) இரவு உயிரிழந்தார்.

கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (47) என்பவரே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் செம்ரெம்பர் 6ம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

அன்றுமாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ரௌடிகள் சிலர் இரும்பகத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரை கண்மூடித்தனமாகத் தாக்கினர். கேதீஸ்வரன் தலையில் கொட்டனால் தாக்கினர். இரும்பகத்துக்கும் சேதம் விளைவித்து விட்டு தப்பித்தனர்.

தலையில் படுகாயமடைந்த அவர், இன்றுவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.