கணவன் இறந்த விரக்தியில் தனது இரண்டு பிள்ளைகளை கிணற்றில் போட்ட தாய்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 29, 2019

கணவன் இறந்த விரக்தியில் தனது இரண்டு பிள்ளைகளை கிணற்றில் போட்ட தாய்!

கணவன் இறந்த விரக்தியில் தனது இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் போட்ட தாய் தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் வவுனியாவில் இன்று இடம்பெற்றுள்ளது.

அண்மையில் விபத்தில் மரணித்த பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த  உதயன் என்பவருடைய மனைவி தனது நான்கு வயது பெண் பிள்ளையையும்  மற்றும் இரண்டரை வயது ஆண் பிள்ளையையும் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றுள் குதிக்க முயன்ற நிலையில் அயலவர்களால் தாய் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில், ஒரு பிள்ளை சம்பவ இடத்திலேயே மரணித்த நிலையில், மற்றைய  நான்கு வயது பெண் பிள்ளை உயிருடன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.