கடமை முடிந்து வீடு திரும்­பிய 27 வயது பட்­ட­தாரி ஆசி­ரியை மாயம்! பொலிஸார் தீவிர தேடுதல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, October 4, 2019

கடமை முடிந்து வீடு திரும்­பிய 27 வயது பட்­ட­தாரி ஆசி­ரியை மாயம்! பொலிஸார் தீவிர தேடுதல்

பாடசாலையில் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த பட்­ட­தாரி ஆசி­ரியை ஒருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

கம்­பளை கீரப்­பனை பிர­தே­சத்தைச் சேர்ந்த 27 வய­தான சந்­திமா நிஸன்­சலா என்ற ஆசி­ரியையே இவ்­வாறு காணாமல் போயுள்ளார்.

அட்டன் ஸ்ரீபாத வித்­தி­யா­ல­யத்தில் கட­மை­யாற்றி வந்த குறித்த ஆசி­ரியை சம்­ப­வ ­தி­னத்தன்று, இர­வா­கியும் வீட்­டுக்கு வரா­த­தை­ய­டுத்து ஆசிரியையின் தாயார் பாட­சாலை அதிபரை தொலை­பேசியூடாக தொடர்பு கொண்­டு விசாரித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த ஆசி­ரியை வழ­மைபோல் அங்­கி­ருந்து புறப்­பட்டு விட்­ட­தாக அதிபர் கூறி­ய­தை­ய­டுத்து, பதற்­ற­ம­டைந்த தாய் ஆசிரியை தொடர்பில் கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இதற்­மைய விசா­ர­ணை­களை மேற்கொண்டு வந்த பொலிஸார் மறுநாள் புதன்­கி­ழமை குறித்த ஆசி­ரி­யையின் வீட்­ட­ருகே நிதாஸ் மாவத்­தையில் அமைந்­துள்ள தனியார் கல்­வி­ய­கத்தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்பு கேம­ரா­வினை பரீட்­சித்துள்ளனர்.

அதில் மாலை 4 மணி ஆறு நிமி­ட­ம­ளவில் ஆசிரியை வீடு நோக்கி செல்­வது பதி­வா­கி­யி­ருந்­துள்­ளது.

இந்த நிலையில் குறித்த ஆசி­ரியை தனது வீட்­டுக்கு 100 மீற்றர் இடைவெளிக்­குள்­ளேயே காணாமல் போயுள்­ளதாக தெரிவித்துள்ள கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.