மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய ஈழத்தமிழ் பெண்: வரவர லூஸ் ஆகிறார்களா வெளிநாட்டு தமிழர்கள்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 12, 2019

மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய ஈழத்தமிழ் பெண்: வரவர லூஸ் ஆகிறார்களா வெளிநாட்டு தமிழர்கள்?

திருமணம் என்றால் மணமகளின் கழுத்தில், மணமகன் தாலி கட்டுவதுதானே வழக்கம். ஆனால், தலைகீழ் மாற்றமொன்றை செய்துள்ளது ஜோடியொன்று.

வழக்கங்களையும், பழைய மரபுகளையும் மீறி சில புரட்சிகரமான செயற்பாடுகள் நடப்பது வழக்கம்தான். ஆனால், இம்முறை நடந்துள்ளது, சுத்த பைத்தியக்காரத்தனம் என சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை வாங்கிக் கட்டுவது ஈழத்தமிழ் ஜோடியொன்று.

வெளிநாடு சென்றாலே செய்வதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்பதை போல சில ஈழத்தமிழர்கள் மாறி வருகிறார்கள். அப்படியான ஒரு நிகழ்வே நடந்துள்ளது.

சுவிஸ் நாட்டில் இந்த திருமணம் நடந்துள்ளது.

மணமகனிற்கு தாலி கட்டிய மணமகள், அந்த தாலியை முத்தமிட்டு வேறு கலகலப்பை மூட்டினார். அது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.