இலங்கையில் மிகவும் வயதான பெண்மணியாக 108 வயதான சுதஹாமி பெயரிடப்பட்டுள்ளார்.
இவர் மொனராகல மாவட்டத்தின் சியாம்பலண்டுவ பிரதேச செயலக பிரிவிலுள்ள மஹாவர பகுதியில் வசித்து வருகின்றார்.
1912 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் திகதி குறித்த பெண்மணி மகர பகுதியில் இவர் பிறந்துள்ளார்.
அவருக்கு 8 பிள்ளைகள். அவர்களின் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என 250 குடும்ப உறுப்பினர்களை தற்போது கொண்டுள்ளார்.
இதேவேளை அவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.