சிறுபான்மை தமிழர்கள் என்னை இன்னமும முழுமையாக புரிந்துகொள்ளவில்லை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 11, 2019

சிறுபான்மை தமிழர்கள் என்னை இன்னமும முழுமையாக புரிந்துகொள்ளவில்லை!

நான் ஒரு சிங்கள இலங்கையராக இருந்திருந்தால் இந்நேரம் நாட்டின் ஜனாதிபதி ஆகியிருப்பேன் என அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
   
அந்த பதிவில் “நான் ஒரு தமிழ் இலங்கையன். சிங்கள இலங்கையனாக இருந்திருந்தால் இந்நேரம் இந்நாட்டின் ஜனாதிபதி ஆகியிருப்பேன்.

தன்னம்பிக்கைதான் என் முதல் பலம். சிறுபான்மை தமிழர்கள் (தமிழ் பேசும் முஸ்லிம்களும் கூட) என்னை இன்னமும்கூட முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன்.

அத்தகைய புரிதல் வருவதற்குள் நான் பொதுவாழ்வில் இருந்து விடை பெற்று விடுவேன் என்றும் நினைக்கிறேன்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.