இது எமது நாடு ! நாம் கள்ளத்தோணிகள் அல்ல - தேரர் ஆவேசம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 7, 2019

இது எமது நாடு ! நாம் கள்ளத்தோணிகள் அல்ல - தேரர் ஆவேசம்!



இலங்கை சிங்களவா்களுக்கு உாிய நாடு என்றும் , நாங்கள் கள்ளதோணிகள் அல்ல எனவும், தாமே நாட்டைக் கட்டியெழுப்பியிருந்தோம் என்றும், இதனால் தமிழா்கள் கோபிக்ககூடாது எனவும் ஞானசார தேரா் தெரிவித்துள்ளார்.

கண்­டி­யில் நேற்று நடை­பெற்ற பொது­ப­ல­சேனா அமைப்­பின் மாநாட்­டில் பங்கேற்றபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , இஸ்­லா­ மிய அடிப்­ப­டை­வா­தத்­தால் இவ்­வ­ரு­டம் இது­வரை எட்­டா­யி­ரம் பேர் வரை உல­கில் கொல்­லப்­பட்­டுள்­ள­தாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சிங்­கள அரசை அமைத்து நாடா­ளு­மன்­ றத்­தில் சிங்­க­ள­வர்­கள் கோலோச்­சும் நிலையை ஏற்­ப­டுத்­து­வோம் என்றும், தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டும் அல்லாமல் நாடா­ளு­மன்­றத்­தில் இருக்­கும் 225 பேரில் குற்­றம் செய்­யா­த­வர்­க­ளைக் காண முடி­யாது என்றும், இனத்­துக்­குத் தலைமை வழங்­கக் கூடிய ஒரு அர­சி­யல் கலப்­பற்ற தலை­வன் எமக்கு வேண்­டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜன­நா­ய­கத்­தின் காப்­ப­ர­ணான நாடா­ளு­மன்­றத்­தில் செயற்­ப­டும் ஒரு­வர் – சிங்­க­ள­வ­ரின் நாடா­ ளு­மன்­றம் இன்று தேவை எனவும், நாட்டில் சிங்­க­ள­வ­ருக்கு ஏற்ற சட்­டங்­கள் தேவை என்பதோடு காவி­க­ளின் பலத்­து­டன் நாம் இந்த நாட்டை வெற்­றியை நோக்­கிக் கொண்டு செல்­ல­லாம் எனவும் தேரர் கூறியுள்ளார்.


நாட்­டில் 10 ஆயி­ரம் விகா­ரை­கள் உள்­ளதாகவும் அதில் , 7 ஆயி­ரம் விகா­ரை­களை நாம் ஒன்று சேர்த்­தால், நாம் எதிர்­பார்க்­கும் வாக்­கு­கள் கிடைக்­கும் என்றும், எங்­க­ளால் இந்த நாட்டை நல்ல இடத்­திற்­குக் கொண்டு செல்­லமுடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 70 வரு­டம் இந்த நாட்டை வீணாக்­கி­ய­வர்­கள் வீட்­டுக்­குச் செல்ல வேண்­டும் எனவும், ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வது எமது நோக்­க­மல்ல என்றும், ஆனால், சிங்­க­ள­வர்­களை சிங்­க­ள­வர்­க­ளாக இருக்­க­வைக்க எமக்கு அர­சி­யல் அதி­கா­ரம் வேண்­டும் எனவும் ஞானசாரதேரர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.