இலங்கை சிங்களவா்களுக்கு உாிய நாடு என்றும் , நாங்கள் கள்ளதோணிகள் அல்ல எனவும், தாமே நாட்டைக் கட்டியெழுப்பியிருந்தோம் என்றும், இதனால் தமிழா்கள் கோபிக்ககூடாது எனவும் ஞானசார தேரா் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , இஸ்லா மிய அடிப்படைவாதத்தால் இவ்வருடம் இதுவரை எட்டாயிரம் பேர் வரை உலகில் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் சிங்கள அரசை அமைத்து நாடாளுமன் றத்தில் சிங்களவர்கள் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம் என்றும், தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டும் அல்லாமல் நாடாளுமன்றத்தில் இருக்கும் 225 பேரில் குற்றம் செய்யாதவர்களைக் காண முடியாது என்றும், இனத்துக்குத் தலைமை வழங்கக் கூடிய ஒரு அரசியல் கலப்பற்ற தலைவன் எமக்கு வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயகத்தின் காப்பரணான நாடாளுமன்றத்தில் செயற்படும் ஒருவர் – சிங்களவரின் நாடா ளுமன்றம் இன்று தேவை எனவும், நாட்டில் சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை என்பதோடு காவிகளின் பலத்துடன் நாம் இந்த நாட்டை வெற்றியை நோக்கிக் கொண்டு செல்லலாம் எனவும் தேரர் கூறியுள்ளார்.
நாட்டில் 10 ஆயிரம் விகாரைகள் உள்ளதாகவும் அதில் , 7 ஆயிரம் விகாரைகளை நாம் ஒன்று சேர்த்தால், நாம் எதிர்பார்க்கும் வாக்குகள் கிடைக்கும் என்றும், எங்களால் இந்த நாட்டை நல்ல இடத்திற்குக் கொண்டு செல்லமுடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 70 வருடம் இந்த நாட்டை வீணாக்கியவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும், ஆட்சியைக் கைப்பற்றுவது எமது நோக்கமல்ல என்றும், ஆனால், சிங்களவர்களை சிங்களவர்களாக இருக்கவைக்க எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் எனவும் ஞானசாரதேரர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.