தமிழன் என்ற திமிர் பிடித்தவன் நான் : மனோ கணேசன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 28, 2019

தமிழன் என்ற திமிர் பிடித்தவன் நான் : மனோ கணேசன்

கதிர்காம யாத்திரிகர்களின் அந்த பயணத்தின் ஆரம்பத்தை "அரோகரா" எனும் ஒலியுடன் ஆரம்பித்துவைத்தது ஒரு தமிழராக எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. நான் தான் முதன்முதலாக அந்த கதவை திறக்க களத்துக்கு வந்த அமைச்சர் என்கிறார்கள் அந்த முருகன் அழைத்ததும் இந்த கணேஷன் ஓடிவந்தேன்.

பாரம்பரிய கலாச்சார பண்புகள் மிக்க கிழக்கிலங்கை தமிழர்கள் சகோ­தர இன, மத மக்­களுடன் ஒற்றுமையாக வாழவேண்டும். அவர்களையும் நாம் அரவணைத்து செல்ல வேண்டும்.


நமது அடையாளங்களையும், சம்பிரதாயங்களையும் அதிகமாக முன்னெடுத்தால் அது ஆபத்து, அவர்களின் எதிர்ப்பை நாம் எதிர்கொள்­­வ­தோடு நாம் காணாமல் போய்­வி­டுவோம். என காரைதீவு விபுலானந்தா பணி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது தேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்­னேற்ற இந்து சமய அலு­வல்கள் அமைச்­சரும் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்துள்ளார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரை­யாற்றும் போது தெரி­வித்­த­தா­வது,

நாம் தமி­ழர்­களின் இருப்­பையும் சகோ­தர இன மக்­களின் அர­வ­ணைப்­பையும் சமாந்­த­ர­மாக முன்­னெ­டுக்க வேண்டும். தமி­ழர்கள் தங்­களில் இருப்பை நிலை நிறுத்திக் கொள்­வ­தற்­காக பல போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர்.


நாம் நமது இருப்பை பாது­காத்துக் கொள்­வ­தற்கு போரா­டு­கின்ற அதே நேரம் இந்த நாட்டில் உள்ள சகோ­தர இன, மத மக்­க­ளையும் அனு­ச­ரித்து செல்ல வேண்டும். தூக்கமில்லாமல் மனோதிடத்துடன் எப்போதும் உங்களுக்காக பணியாற்றிவரும் நான் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பேன்.

பாரம்­ப­ரி­ய­மாக வடக்கு, கிழக்கு, மலை­ய­கப் ­ப­கு­தி­க­ளி­லி­ருந்து வரு­டாந்தம் கதிர்­கா­மத்­திற்கு மேற்­கொ­ள்­ளப்­பட்­டு­ வரும் பாத­யாத்­தி­ரை அர­ச­ அங்­கீ­கா­ரத்­துடன் தேசிய புனித யாத்­தி­ரை­யாக பிரகடனப்படுத்த அமைச்சரவை பத்திரம் ஒன்றை நான் சமர்ப்பிக்க உள்ளேன்.

பொத்துவிலில் எமக்கு சொந்தமான ஒரு காணி பிரச்சினையில் இருப்பதாகவும் அந்த காணியில் கட்டிடம் கட்ட நாங்கள் முன்னெடுத்த வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிகிறேன். அந்த மணடபத்தை கட்டிமுடிக்க இந்து விவகார திணைக்களம், பாராளுமன்ற உறுப்பினர் , அரச அதிபர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.



நாட்டில் தமி­ழர்கள் தங்­களின் இருப்பை நிலைநிறுத்­து­வ­தோடு சகோ­தர இன, மத மக்­களை அர­வ­ணைக்க வேண்டும். அப்­போ­துதான் சமூக நல்­லி­ணக்­கத்­தினை பாது­காத்துக் கொண்டு தமிழ் மக்­களின் இருப்பை உறு­தி­ப் ப­டுத்­த­மு­டியும் என்றும் எங்களுடைய பரந்த மனதை பார்த்து அவர்கள் பலவீனமானவர்களாக எண்ணிவிடக்கூடாது என்றார்.

தொடர்ந்தும் பேசிய அவர், தமிழன் என்ற திமிர் பிடித்தவன் நான், திமிர்தான் வேலைக்கு ஆகும் , எங்கே எதை காட்டவேண்டும் என்பதை நான் நன்றாக அறிந்துள்ளேன். முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் மணிமண்டபத்தை மேலும் புனரமைப்பு செய்து தளபாடங்கள் கொள்வானவு செய்ய 28 லட்சம் ரூபாயை ஒதுக்கி தருகிறேன் என்றார். இந்நிகழ்வில் பிரதேச கோவில்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கு நிதியுதவியும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்­நி­கழ்வில் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வேலு­குமார், அம்­பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கவீந்­திரன் கோடீஸ்­வரன் மற்றும் அம்­பாறை மாவட்ட மேலதிக அர­சாங்க அதிபர், இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷ்ரத்மானந்த ஜீ மகராஜ் ஆகி­யோரும் உரை­யாற்­றினர்.


நிகழ்வில் அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிரில், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் திரு. ஜெயராஜன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர் அழகக்கோன், இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு உமா மகேஸ்வரன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகதீசன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்