சியோன் தேவாலயத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, June 29, 2019

சியோன் தேவாலயத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு 2வது தடவையாகவும் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்னர் அங்கிலிக்கன் தேவாலயம், மத்திய வீதியிலுள்ள மரியா பேராலயம். ஆகியவற்றுக்கு தீடீர் விஜயம் ஒன்றை நேற்று சனிக்கிழமை மேற்கொண்டிருந்தார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் 30 பேர் உயிரிழந்து 65 பேர்வரை படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதலையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் விஜயம் மேற்கொண்டு தேவாலயத்தைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கிவைத்தார்.


இதனைத் தொடர்ந்து இரண்டாவது தடவையாக நேற்று விஜயம் ஒன்றை மேற்கொண்டு இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தேவாலய புனர்நிர்மாண வேலைகளைப் பார்வையிட்டார்.

பின்னர் மட்டக்களப்பு நீதிமன்றத் தொகுதிக்கு அருகில் உள்ள அங்கிலிக்கன் தேவாலயம் மற்றும், மத்திய வீதியிலுள்ள மரியா பேராலயம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.