கல்முனையில் கூட்டமைப்பின் கைப்பிள்ளை மனைவியை விட்டு! பல பெண்களுடன் தொடர்பில்!! சிக்கிய தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 30, 2019

கல்முனையில் கூட்டமைப்பின் கைப்பிள்ளை மனைவியை விட்டு! பல பெண்களுடன் தொடர்பில்!! சிக்கிய தகவல்


அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுள் கலகத்தை ஏற்படுத்தி தன்னை கிங் மேக்கராக காட்டிக்கொள்ள மாற்று கட்சிகளுக்குக்கும் கல்முனை மாநகரசபை மேயர் ஏ.பீ. றக்கீப்பிற்கு இரவில் குடைபிக்கும் மர்ம நபராக கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் (மாம்பழம்) ராஜனின் செயற்பாடு அமைந்திருப்பது இளைஞர்கள் மத்தியில் பெரும் மனக்கிலேசத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

கல்முனை பிரதேசத்தில் தமிழ் மக்களின் காவலனாக செயற்படும் இளைஞர்சேனையை உடைத்தெறிய இரவு வேளையில் மேயரிடன் சேர்ந்து தமிழினத்தை அழிக்க உதவி செய்யும் சிலரிடமும் கல்முனை தமிழ் இளைஞர்கள் பெயர் விபரங்களை ஒப்படைத்ததோடு மாத்திரம் நின்று விடாமல் அவர்களது முன்னைய செயற்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்து வருகின்றார்.

"பிறர்மனை நாடாதே" என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவனாக செயற்படும் ராஜன். இரவில் மனைவி பிள்ளைகளுடன் இருக்காமல் மட்டக்களப்பில் சின்னவீடு வைத்திருக்கும் இவர் சமூக சேவை என்ற பேரில் பெண் தேடும் படலத்தையா தொடங்கியிருக்கிறாய் போல...

நண்பனுக்கு துரோகம் செய்து அவனது மனைவியை கபளீகரம் செய்து அப்பெண்ணை வற்புறுத்தி மிரட்டி பணம் பெறுவது கூட மனைவிக்கு செய்யும் துரோகம் அல்லவா?

இதனால் இவரது மனைவி பிள்ளைகள் பிரிந்து சென்றமையை ஞாபகப்படுத்தவேண்டிய தருணம் இதுவே...

யாருக்காக அரசியல் செய்ய சென்றார் இவர் தமிழ் சமுகத்தை பிரிக்கவா? ஒப்பந்த வேலைகளுக்காய் மகிந்தவாதிகளுடன் சேர்ந்து தமிழ்தேசியத்திற்கு எதிராக கடந்த காலங்களில் செயற்ப்பட்டு வந்த இவரை தமிழ் தேசிய நீரோட்டத்திற்குள் கொண்டுவந்தது யாரென்று அறியாமையிலா இருக்கிறார்.



ஹென்றி மகேந்திரன் எனும் கல்முனை பிராந்தியத்தில் பிரபல்யமான ஒருவருடன் இணைந்து ஒட்டுண்ணி மாதிரி அனைத்தையும் உறிஞ்சி குடித்துவிட்டு அவரை நடுத்தெருவில் விட்டு விலாங்குமீன் போல் பகலில் தமிழ் இளைஞர்களுடனும் இரவில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் நிந்தனை செய்யும் இவர் வட்டார மக்களுக்கு செய்யும் உபகாரம் துரோகம் மாத்திரமே.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மாநகரசபை உறுப்பினர்களிடையே பிரித்தாளும் தந்திர யுத்தியை பயன்படுத்தி முரண்நிலையை தோற்றுவிற்கும் ராஜன் குடும்பங்களை பிரிப்பது முதல் மாநகர மக்கள் பிரதிநிதிகளை பிரிப்பது வரை வெற்றி கண்டவனாய் திகழ்கிறார்.

கல்முனையில் இளைஞர் சேனையையும், இளைஞர் ஒன்றியத்தையும் பிளவுபடுத்தி குளிர்காய முற்பட்டார்.


இதன்மூலம் சேனையின் மக்கள் சேவையை கட்டுப்படுத்தி பிரபலம் தேடபார்ப்பதை கிழக்கு வாழ் இளைஞர்கள் கடுப்புடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கொந்தராத்து வேலை என்ற படலத்துடன் ஆரம்பித்து கல்முனை வைத்தியசாலையில் மூட்டை பூச்சி போன்று அனைத்தையும் உறிஞ்சி குடித்து ஏப்பமிட்டதை மறந்து தற்போது நல்லவன் போல் பிக்குவுடன் சேர்ந்து நாடகமாடுகிறார் இந்த நாடகம் இன்னும் எத்தனை நாட்களுக்கு என புரியவில்லை என ரெலோ முக்கியஸ்தரும் கல்முனை மாநகர சபையின் எதிர் கட்சித் தலைவருமான ஹென்றி மகேந்திரன் ஆதங்கப்பட்டுள்ளார்.

மேலும் ஹென்றி மகேந்திரன் குறிப்பிடுகையில் இவரை மாநகர சபை வேட்பாளராக பேட்டியலில் இணைப்பதற்கு பல எதிர்ப்புக்கள் கட்சிக்குள் நீடித்தன அதனையும் மீறி இவரை எமது ரெலோ கட்சியின் உறுப்பினராக கூட்டமைப்பில் இணைத்தேன் அவர் தன் குணத்தை காட்டிவிட்டார் என கவலையுடன் கூறினார்.



முன்னர் இராணுவ புலனாய்வுத்துறை மற்றும் பிள்ளையானின் ஆயுதக் குழுவில் ஆட்கடத்தல் செய்து பணம் வசூலிப்பது என பல மோசடிகளில் ஈடுபட்ட சந்திரசேகரம் (மாம்பழம்) ராஜனின் கடந்த பாராளுமன்றத்தில் கூட்டமைப்புக்கு எதிராக சுயேச்சையாக மாம்பழ சின்னத்தில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஹாரிஸ் எம்.பியிடம் பணம் பெற்று கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு அரும் பாடு பட்டவர்.

இவற்றை எல்லாம் ஹென்றி மகேந்திரனிடம் கூறியும் எதையும் கேட்காமல் சந்திரசேகரம் (மாம்பழம்) ராஜனிற்கு இடம் கொடுத்ததன் விளைவை தற்போது கூட்டமைப்பு அள்ளிச் சுமக்கிறது என முன்னால் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முலும் அவர் குறிப்பிடுகையில்...

இவ்வாறான சீரழிவிற்கு தமிழரசுக்கட்சியே முழுப் பெறுப்பையும் ஏற்க வேண்டும் கட்டுப்பாடுகளை மீறும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தால் யாரும் இப்படி செயற்பட முடியாது தமிழர் விடதலைக் கூட்டனி தலைவர் ஆனந்த சங்கரியிடம் உள்ள அடிப்படை அறிவு கூட தமிழரசுக் கட்சியிடம் இல்லை போல என அவர் தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் எனும் வரையரை இருக்க வேண்டும் அதை விடுத்து ஒப்பந்தகாரன் - கலியானராமன்கள் - மக்களை ஏமாற்றுபவர்களிற்கு ஆசனம் கொடுத்தால் இது தான் நிலை காலப்போக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் பதம் மாறி தமிழ் தேசியக் கூட்டிக்கொடுக்கும் கட்சி என பெயர் மாறிவிடும் சூழல் உள்ளதாகவும் ஆதங்கம் வெளியிட்டார்.

சந்திரசேகரம் (மாம்பழம்) ராஜன் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.