எட்டாயிரம் பெண்களின் வாழ்வை சீரழிந்த குருணாகல் வைத்தியர்! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய ஊடகம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, May 24, 2019

எட்டாயிரம் பெண்களின் வாழ்வை சீரழிந்த குருணாகல் வைத்தியர்! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய ஊடகம்


சட்டவிரோதமாக சிங்களப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு சிசேரியன் சத்திரசிகிச்சையை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருணாகலை வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாஃபி, தாம் 8000 பேருக்கு மகப்பேற்று சத்திரசிகிச்சை புரிந்தமையை ஒப்புகொண்டதாக, திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் குடும்பக்கட்டுப்பாட்டு சத்திரசிக்சையை சட்டவிரோதமாக மேற்கொண்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, குருணாகலை பொதுவைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நேற்று விசாரணை இடம்பெற்றது.

இதன்போது அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.

சட்டவிரோத குடும்பக்கட்டுப்பாடு மற்றும் வைத்தியசாலையில் பிறக்கின்ற குழந்தைகளை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களின் ஊடாக அவர் பெருமளவில் பணம் ஈட்டியிருப்பதாக பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும் திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் நேற்று இரவு கைது செய்யப்பட்ட குறித்த வைத்தியர், சந்தேகத்துக்கு இடமான முறையில் சொத்து சேகரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காகவே கைதானதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர் சட்டவிரோத குடும்பக்கட்டுப்பாட்டு சத்திரசிக்சையை புரிந்தாரா? என்பது தொடர்பில் பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

அதேநேரம் இந்த செய்தி வெளியாக்கப்பட்டதை அடுத்து தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், தமக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அவர் வைத்தியசாலை பணிப்பாளரிடம் கோரியுள்ளார்.

ஏற்கனவே அவர் 4000 சிங்களப் பெண்களுக்கு சட்டவிரோதமாக குடும்பக்கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சையை புரிந்ததாக திவயின செய்தி வெளியிட்டிருந்ததை அடுத்து, இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தவிடயம் நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அது ஆராய்ந்து சபையில் அறிவிப்பதாக சபாநாயகர் கூறி இருந்த போதும், நேற்றையதினம் அவ்வாறான தெளிவுப்படுத்தல் எதனையும் அவர் வழங்கவில்லை.

எனினும் சட்டவிரோத குடும்பக்கட்டுப்பாடு இடம்பெற்றமை தொடர்பாக காவற்துறையோ, புலனாய்வுப் பிரிவோ எந்த விசாரணைகளையும் நடத்தவில்லை என்று நேற்று முன்தினம் கூறிய சபநாயாகர், நேற்றைய அமர்வில் வைத்து இதுதொடர்பில் பொலிஸ் மா அதிபர் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டார்.