யாழ்.தாவடி பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 9, 2019

யாழ்.தாவடி பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!


யாழ்.தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்திலிருந்து வெடிபொருட்கள், வயா்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர்.

குறித்த பகுதியில் இன்று சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டிருந்த தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டதாக கூறியுள்ள பொலிஸார்,

9 மில்லி மீற்றர் துப்பாக்கி ரவை கூடு மற்றும் 5 தோட்டாக்கள், வயர்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.