TELO ஜனாவின் திடுக்கிடும் இரகசியக் கொலைகள் அம்பலம்! செல்வம் MPயின் பதில் என்ன? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 6, 2019

TELO ஜனாவின் திடுக்கிடும் இரகசியக் கொலைகள் அம்பலம்! செல்வம் MPயின் பதில் என்ன?

யார் அந்த கொலையாளி கொள்ளைக்காரன் மாமா? இப்போ எங்கே அந்த கொலையாளி கொள்ளைக்காரன் மாமா?

கள்ளு,சாராயம்,வடிசாராயம் கஞ்சா, வீடி, சுறுட்டு, இவை அனைத்திற்கும் அடிமையானவந்தான் இந்த மாமா! இவனின் சொந்த பெயர் கோவிந்தன் கருணாநிதி சொந்த ஊர்தான் செட்டிபாளையம் இவன் வேறு யாருமல்ல கோவிந்தன் கருணாகரன் (ஜனா) வின் சொந்த தம்பி!

அணைத்து இயக்கங்களும் ஒன்றாக இருந்தபோது எல்லா இயக்கங்களிலும் மற்றும் பொதுமக்களிடமும் இவன் நன்றாக அடி வேண்டியுள்ளான் இதனை அறிந்து கொண்ட ஜனா தனது தம்பியையும் டெலோ அமைப்பில் சேர்த்துக்கொண்டார் இதில் நிறைய டெலோவின் பழைய உறுப்பினர்களுக்கு மாமாவின் வருகை விருப்பமில்லாமல் இருந்தது ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஏன் என்றால் ஜனாவின் ஆதிக்கம் டேலோவில் அதிகமாக இருந்தது.

TELOவில் சேர்ந்து கொண்ட மாமா தான் அடி வேண்டிய பொதுமக்களை பழிவேண்ட நினைத்தான் அதில் ஒரு குடும்ப கொலைதான் சினதம்பி கோபாலப்பிள்ளை சி . சாந்தலிங்கம் சி . தெய்வநாயகம் இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

இவர்கள் செட்டிபாளையத்தின் அயல் கிராமமாகிய மாங்கட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்கள் இவர்கள் மீது மாமாவுக்கு அதிக கோபம் இருந்தது ஏன் என்றால் இவர்கள் மாமாவின் அராஜகத்தை தட்டி கேட்டவர்கள் அதனால் மாமா அவர்களை கொலை செய்வதற்கான சந்தர்பத்தை எதிர்பாத்து கொண்டிருந்தான் அதற்கான சந்தர்பமும் மாமாவிட்கு கிடைத்தது.

இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தபோது சி. தெய்வநாயகம் என்பவரை மாமா கொலை செய்தான் இவர் புலி என்று இந்திய இராணுவத்துக்கு அறிவிக்க பட்டது இதனால் மற்ற சகோதரர்கள் பயத்தினால் அச்சத்தோடு வாழ்ந்தார்கள் இதே காலகட்டத்தில் சாந்தலிங்கம் என்பவரும் கொலை செய்யப்பட்டார் இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள் மனைவி இப்போதும் விதவையாக வாழ்ந்து கொண்ட்டிருக்கின்றார்.

அதன் பின்னர் சி . கோபாலப்பிள்ளை மாமாவினால் பிடிக்கபட்டு செட்டிபலயத்தில் அமைந்திருந்த இலங்கை இராணுவமுகாமுக்குள் கொண்டு செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்படார் இவர்கள் எல்லோரும் புலிகள் என்றுதான் இலங்கை இந்திய இராணுவத்துக்கு அப்போது பாராளுமண்ற உறுப்பினராக இருந்த ஜனாவினால் கூறப்பட்டது.

அதன் பின்னர் இவர்களின் மூத்த சகோதரராகிய சின்னதம்பி அழகையா என்பவரின் மூன்று பிள்ளைகளாகிய நடேசன்,கமலநாதன்,யோகநாதன் ஆகிய மூவரும் மாமாவின் தகவலின் பிரகாரம் இலங்கை இராணுவத்தினால் கொலை செய்யப்பட்டார்கள்.

அதுமட்டுமல்ல செட்டிபாளையத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருக்கிலேசி குணம் திருகிலேசி பேரின்பம் இவர்கள் இருவரும் சகோதரர்கள் இவர்களும் மாமாவினால் கொலை செய்யப்பட்டார்கள் அது மட்டுமல்ல செட்டிபாளையத்தின் அயல் கிராமமாகிய குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் என்பவர் மாமாவினால் பிடிக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு காத்தான்குடி வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிட்சை பலனின்றி மரணமானார் இதற்கான முழுப்பொறுப்பும் மாமாவையே சாரும் அதுமட்டுமல்ல நாகமுனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட யோகராசா (வாவு)என்கின்ற மாணவன் செட்டிபாளையத்தில் திரு அமலநாதன் அப்போது பிரதேச செயலாளராக இருந்தவரின் வீட்டில் நின்று செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று கொண்டிருந்தவரை இரவு நேரத்தில் மாமாவினால் சுட்டு கொலை செய்யப்பட்டான்.



இதை ஜனாவினாலோ அல்லது மாமாவினாலோ மறுக்க முடியுமா? அது மட்டுமல்ல செட்டிபாளையத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி முத்துலிங்கம் என்பவர் கிரான்குளத்தில் வைத்து ஜனாவின் உத்தரவுக்கு அமைய வெட்டி கொலை செய்யப்பட்டார் இதை ஜனாவால் மறுக்க முடியுமா?

அந்த வறுமையான குடும்பத்திற்கு இந்த ஜனாவால் என்ன ஆறுதல் கூறமுடியும்?அது மட்டுமல்ல செட்டிபாளையத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ரேகா என்கின்ற பெண் தேற்றாத்தீவை பிறப்பிடமாக கொண்ட தங்கவேல் என்பவரை திருமணம் செய்திருந்தார் இவரின் தம்பியை பிடிப்பதட்காக தங்கவேலை பிடித்து சென்று விட்டார்கள் மறுநாள் அவரின் தம்பியும் பிடிக்கப்புட்டு இருவரும் ஒன்றாக அடித்து கொலை செய்யப்பட்டார்கள் இதை ஜனாவினாலோ அல்லது மாமாவினாலோ மறுக்க முடியுமா?

அந்த வறிய குடும்பத்தில் இப்போதும் விதவையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த விதவைக்கு இவர்களினால் என்ன ஆறுதல் கூறமுடியும்?இதே நிலைமை ஜனாவின் குடும்பத்திட்கு ஏற்பட்டால் தான் அதன் வலி என்னவென்று தெரியும்! அது மட்டுமல்ல மங்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவவும் கொண்ட சீனித்தம்பி யோகராசா என்பவர் ஜனாவின் உத்தரவின் படி கொலை செய்யப்பட்டார் அவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு இப்போதும் அவரின் மனைவி விதவையாக வாழ்கின்றாள் இவர்களுக்கு இந்த ஜனாவினால் என்ன ஆறுதல் கூறமுடியும்?அது மட்டுமல்ல செட்டிபாளையத்தை பிறப்பிடமாக கொண்ட ஏகாம்பரம் யோகராசா

குமாரசாமி கிருபா என்கின்ற இருபரும் ஜனாவினால் கட்டாய இராணுவத்துக்கு சேர்க்கபட்டார்கள் அப்போது இருந்த (தமிழ் தேசிய இராணுவம்) அதிலிருந்து இருவரும் தப்பி சென்ற ஒரே காரனத்திற்காக இருவரும் பிடித்து கொலை செய்யபட்டார்கள் இந்த ஜனா நினைத்திருந்தால் அவர்களை நிச்சயமாக காப்பாத்தி இருக்க முடியும் ஆனால் கொலைக்கான உத்தரவே இந்த ஜனாவினால்தான் பிறப்பிக்க பட்டது என்பதுதான் உண்மை இதனால் பாதிக்க பட்ட அந்த கஸ்ரமான குடும்பங்களுக்கு இந்த ஜனாவினால் அவர்களின் பிள்ளைகளை திருப்பி கொடுக்க முடியுமா? இப்படி ஜனா மற்றும் மாமா ஆகியோரின் கொலைகள் கொள்ளைகள் பற்றி எழுதுவதற்கு நிறைய உண்டு.



அந்த உணமைகளை தொடர்ந்தும் எழுதுவேன் மற்றும் ஜனா மாமாவின் நடவடிக்கைகளில் நிறைய டெலோ பழைய உறுப்பினர்களுக்கு உடன்பாடில்லை அதை சிலர் வெளிப்படையாக ஜனாவிடம் கூறியவர்கள் ஜனாவினால் பழிவாங்க பட்டர்கள் அதில் ஒருவர்தான் செட்டிபாளையத்தை சேர்ந்த கந்தையா குணம் (பலு)இவரும் டெலொவில் பழைய உறுப்பினர் இவருக்கு ஜனா மற்றும் மாமாவின் தன்னிச்சையான செயல் பாட்டினை வன்மையாக எதிர்த்தவர் அந்த ஒரே காரனத்திட்காக ஜனாவினால் பலுவை கொலை செய்வதட்கான திட்டம் தீட்டப்பட்டு அதை கட்சிதமாக செய்தும் முடித்தார்.

இந்திய இராணுவம் மட்டக்களப்பிலிருந்து வெளியேறியவுடன் அப்போது இருந்த தமிழ் தேசிய இராணுவம் காட்டு பாதையினால் திருகோணமலையை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஜனாவின் விசுவாசிகளினால் பாலு சுட்டு கொலை செய்யப்பட்டார் என்பதுதான் உண்மை அனால் புலிகள் தான் பாலுவை கொண்றனர் என்று கூறப்பட்டாலும் அதுவல்ல உண்மை

மாமாவின் செயல் பாட்டினில் இலங்கை இராணுவத்துக்கு கூட பிடிக்க வில்லை அப்படியான ஒருசில அதிகாரிகளும் இருந்தார்கள் அதை உண்மையாகும் வகையில் செட்டிபளையத்தின் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மாமாவின் பொதுமக்களின் மீதான அட்டகாசத்தை எதிர்த்து மாமாவை அடித்து இராணுவ முகாம் ஜெயிலில் அடைத்தார்.

அதை அறிந்துகொண்ட ஜனா தனது பாராளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி தனது தம்பியை விடுதலை செய்தார் அத்தோடு இராணுவ உயர் அதிகாரிகளிடம் கதைத்து அந்த அதிகாரியையும் இடமாற்றம் செய்தான் அதன் பின்னர் ஜனாவின் பாராளுமண்ற அதிகாரம் பறிபோனது மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார்.

மக்களினால் தூக்கி வீசப்பட்டார் பின்னர் கொள்ளை அடித்து சேர்த்த பணத்தோடு லண்டன் சென்றார் பின்னர் மாமா சவுதி அரேவியா சென்றான் அங்கு மாமாவினால் பாதிக்க பட்டவர்களினால் தாக்கப்பட்டு மீண்டும் நாடு திரும்பினான் அவனை பல லச்சங்கள் செலவுபண்ணி ஜனா தன்னோடு லண்டனுக்கு எடுத்து கொண்டான் இப்போது கொலைகாற மாமா லண்டன் ஜெயிலில் உள்ளதாக அறிகின்றேன் அனால் அதை உறுதியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

அத்தோடு கொலைகார ஜனா கொள்ளை அடித்த பணத்தை வைத்து செல்வம் அடைக்கலனாதனுக்கு பணம் கொடுத்து கூட்டமைபினில் மாகாண சபையில் போட்டியிடுவதற்கான இடத்தை பெற்று கொண்டான் அதில் போட்டியிட்டு ஒரு கோடி பணத்திற்கு மேல் செலவு பண்ணி மாகாண சபை உறுப்பினர் பதவியையும் தனது கொள்ளை அடித்த பணத்தையும் வைத்து உல்லாசமாக! இவை அணைத்தும் கூட்டமைப்பினரால் உருவாக்கி கொடுக்கப்பட்டவை.

பொது மக்களின் காவலாளியாக நிக்க வேண்டிய கூட்டமைப்பு கொலையாளியின் பாதுகாவலராக இருப்பதன் மர்மம் என்ன?கூட்டமைப்பு ஜனாவின் கொள்ளை அடித்த பணத்திற்கு அடிபணிந்து விட்டார்களா? கூட்டமைப்பினர் தங்களின் மௌனத்தை கலைப்பார்களா?