தென் கொரியா, உலகின் முதல் வர்த்தக ரீதியான 5G நெட்வொர்க்கை நிறுவ உள்ளது.
இதன் மூலம் ஒரு முழுப்படத்தையும் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் டவுன்லோடு செய்துவிட முடியும்.
வரும் வெள்ளியன்று இந்த அதிவேக 5G மொபைல் நெட்வொர்க் நிறுவப்பட உள்ளது.
இதேபோல் சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்த தொழில்நுட்பம் 4Gயை விட 20 மடங்கு அதிக வேகத்தில் செயல்படக்கூடியதாகும்.
ஆனால் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த அதற்கேற்ற மொபைல்களை வைத்திருப்பது அவசியமாகும்.