குழந்தையை மூச்சுத்திணற கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 29, 2019

குழந்தையை மூச்சுத்திணற கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்!




கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த 24 வயதான பெண்மணி தனது குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுரேஷ் - ஆதிரா தம்பதியினருக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது.

ஆதிரா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பதறியடித்துக் கொண்டு சென்றார்.

தனது குழந்தை மூச்சு திணறல் காரணமாக மயங்கி விழுந்துவிட்டதாக கண்ணீர் சிந்தியுள்ளார்.

மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதனால் மருத்துவர்கள் ஆதிராவிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்துள்ளார்.

இதனால் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக இதுபற்றி பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில்,

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் பெற்ற குழந்தையை ஆதிராவே தலையணையால் முகத்தை மூடி மூச்சு திணறவைத்து கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

தற்போது ஆதிரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.