சுடுகாட்டில் தாயின் புடவையில் தூக்கு போட்டு மாணவன் தற்கொலை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 30, 2019

சுடுகாட்டில் தாயின் புடவையில் தூக்கு போட்டு மாணவன் தற்கொலை!



10 ஆம் வகுப்பு தேர்வில் தொடர் தோல்வி அடைந்த காரணத்தால் விரக்தி அடைந்த மாணவன் தனது தாயின் புடவையில் சுடுகாட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்த சுரேந்தர் என்பவருக்கு தந்தை இல்லை. தாய் சித்த மருத்துவமனையில் வேலை பார்த்து மகனை படிக்க வைத்துள்ளார்.

10-ம் வகுப்பு தேர்வு எழுதிய சுரேந்தர் தோல்வி அடைந்துவிட்டார், இதனால் மீண்டும் டுடோரியல் கல்லூரியில் படித்து 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

ஆனால் , தற்போதும் தோல்வியடைந்ததையடுத்து விரகத்தியில் தனது தாயின் புடவையை எடுத்துசென்று சுடுகாட்டில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.