மஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன.
இதனையடுத்து இன்று அதிகாலை சடலங்கள் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டன.
உயிரிழந்த பத்து பேரின் சடலங்களும் டச்பார் மற்றும் மாமாங்கம், சின்னஉப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழந்தர்களுக்கு பெருமளவானோர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 10பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்தில் மட்டக்களப்பில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் உட்பட 10 பேரே உயிரிழந்திருந்தனர்.
தனியார் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்திருந்தது.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.