இது எங்களுடைய நாடு இங்கே உங்களுக்கு என்ன வேலை..?” தமிழ் உத்தியோத்தா் மீது 4 சிங்கள உத்தியோத்தா்கள் தாக்குதல்..!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 30, 2019

இது எங்களுடைய நாடு இங்கே உங்களுக்கு என்ன வேலை..?” தமிழ் உத்தியோத்தா் மீது 4 சிங்கள உத்தியோத்தா்கள் தாக்குதல்..!!

இது எங்களுடைய நாடு இங்கு உங்களுக்கு என்ன வேலை? என கேட்டு பொலனறுவை சிறைச்சாலையில் கடமையாற்றும் தமிழ் உத்தியோக த்தா் மீது சிங்கள உத்தியோகத்தா்கள் 4 போ் இணைந்து தாக்குதல் நட த்தியிருக்கின்றனா்.

மதுபோதையில் இருந்த பெரும்பான்மையின சிறைச்சாலை உத்தியோ கத்தர்கள் நான்கு பேர் இணைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்த தாக்குதலை மேற்கொண்டதாக பொலனறுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தினைச் சேர்ந்த பி.பத்மகம்சன் என்னும் சிறைச்சாலை உத்தியோகத்தரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதுடன் அவர் இன்று வாழைச்சேனை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

‘இது எங்கட நாடு இங்கு உங்களுக்கு என்னடா வேலை’ என்று கேட்டு கேட்டு தன்னை தாக்கியதாகவும் தனது மோட்டார் சைக்கிளையும் சேதப்ப டுத்தியுள்ளதாகவும் காயமடைந்த பத்மகம்சன் தெரிவித்தார். பல கால மாக பொலனறுவை சிறைச்சாலையில் கடமையாற்றும்

தமிழ் உத்தியோகத்தர்களுக்கு பெரும்பான்மை உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தல் விடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.