கதிரவன் வாசகர்களுக்கு இனிய பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
தமிழன் என்று சொல்லடா
--தலை நிமிர்ந்து நில்லடா
உள்ளத்தில் நிறைந்த ஒலியடா
--உயிரில் கலந்த வரிகளடா !
திருவிழாக்கள் நடக்கும் இல்லமும்
--திருநாளாய் தித்திக்கும் இதயமும்
திகட்டாத இனிப்பாய் இருந்திடும்
__தினம்தினம் நினைவில் வந்திடும்.
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு ,
என்னருமை எழுத்து நண்பர்களுக்கு ,
தைத் திருநாளாம் பொங்கல் தின வாழ்த்துக்கள்
தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
இன்பமே பொங்கி வழியட்டும்
இல்லங்களிலும் , இதயங்களிலும் !
அல்லல் நீங்கி மகிழ்ச்சி பெருகட்டும்
அன்பு நிறைந்து அகங்கள் மகிழட்டும் !
குறைகள் மறைந்து குதூகலம் கூடட்டும்
கவலைகள் நீங்கி களிப்புடன் வாழட்டும் !
அநீதிகள் அகன்று நீதியே நிலைக்கட்டும்
அகிலமே ஆனந்தத்தில் இனி மிதக்கட்டும் !
அனைவருக்கும் என்னுடைய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !!!
பழனி குமார்