தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக மங்கள சமரவீர அறிவிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 9, 2020

தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக மங்கள சமரவீர அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.


மேலும் நாடாளுமன்ற அரசியலில் இருந்து தான் விலக தீர்மானித்துள்ளதாகவும் எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கு வாக்களிப்பதை தவிர்க்குமாறும் அவர் மாத்தறை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.