கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான சீனப் பெண்ணை வைத்தியசாலையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, February 11, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான சீனப் பெண்ணை வைத்தியசாலையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீனப் பெண்ணை, எதிர்வரும் இரண்டு நாட்களில் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்ற முடியும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சீனப் பெண் தொடர்பான பல வைத்திய சோதனை முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
43 வயதான குறித்த சீன நாட்டுப் பெண், தற்போது பூரண குணமடைந்த நிலையில் கொழும்பு தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் பொரளையில் உள்ள வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து இவர் தொடர்பான சோதனை அறிக்கைகளை எதிர்பார்த்துள்ளதாக ஐ.டி.எச். வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சோதனை முடிவுகள் திருப்திகரமாக அமைந்தால், அடுத்த இரண்டு நாட்களில் சீனப் பிரஜையை வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த சீனப் பிரஜை கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது