வவுனியா கற்பகபுரம் பகுதியில் முதியவரின் சடலம் மீட்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 24, 2020

வவுனியா கற்பகபுரம் பகுதியில் முதியவரின் சடலம் மீட்பு



வவுனியா கற்பகபுரம் பகுதியில் இன்று (24) காலை தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கற்பகபுரம் அ.த.க பாடசாலைக்கு அருகேயுள்ள வீதியில் அமைந்துள்ள வீடோன்றிலிருந்து வீட்டு வளாகத்தின் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 78 வயதுடைய இராமன் முருகையா என்பவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த முதியவர் அவரது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததுடன் இரவு 9.00 மணியளவில் எம்முடன் ஒன்றாக இருந்து உணவருந்தினர் அதிகாலை 5.00 மணியளவில் வெளியே சென்று பார்த்த சமயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். அதன் பின்னரே பொலிஸ் மற்றும் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியதாக முதியவரின் மகள் தெரிவித்தார்.

முதியவர் தூக்கிய தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்ட இடத்தில் அவரது இரு காலணிக்கும் இடையில் டோச் லைட் உள்ளதுடன் தூக்கில் தொங்கியுள்ள மரம் சிறிதாக காணப்படுவதனாலும் முதியவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ள நிலையில், குற்ற தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் மேலதிக விசாரணைகளுக்காக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படும் சடலம் மீட்கப்படாமல் தூக்கில் தொங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.



சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் , பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.