அரசை எதிர்க்கவும் தயங்கோம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, January 25, 2020

அரசை எதிர்க்கவும் தயங்கோம்

எமது மக்களிற்கு எதிரான விடயங்களை இந்த அரசு மேற்கொண்டால் எதிர்ப்பதற்கு பின் நிற்கமாட்டோம் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,

இந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டு வருவார்களேயானால் சிறுபான்மை மக்களிற்கு எதிரான ஒரு விடயமாகத்தான் அதனை பார்க்கமுடியும்.

நாம் அரசாங்கத்துடன் இருப்பது எமது மக்களுக்கான அபிவிருத்திகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்காகவே தவிர எமது மக்களை சிறுமைபடுத்துவதற்கல்ல. எனவே பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன்.

எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி சிங்கள, பௌத்த பேரினவாதத்தை ஏற்படுத்துவார்களேயானால் இந்நாட்டை சரியான பாதையிலே முன்கொண்டு செல்ல முடியாது - என்றார்.