யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மருத்துவபீட மாணவனொருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அவரது தங்குமிடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட 4ம் வருட மாணவனான கியூமன் என்ற மன்னாரை சேர்ந்தவரே உயிரை மாய்த்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள தங்கும் விடுதியில், தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.
சம்பவ இடத்தில் விசாரணைகளை தொடங்கிய பொலிசார், மாணவன் உயிரை மாய்த்து இரண்டு நாளாகியிருக்கலாமென தெரிவித்துள்ளனர்.