எழுக தமிழுக்கு ஆதரவு - உறவுகளை பறி கொடுத்து தவிக்கும் உறவுகள் அறிவிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 13, 2019

எழுக தமிழுக்கு ஆதரவு - உறவுகளை பறி கொடுத்து தவிக்கும் உறவுகள் அறிவிப்பு

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு நாம் முழுமையான ஆதரவினை வழங்கி அதில் கலந்கொள்வோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பின் தலைவி யோ.கனகரஞ்சனி இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,

எழுக தமிழ் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கு எமது பூரண ஆதரவினை வழங்குவதுடன் இதில் தனிப்பட்ட மத, கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தரப்பினனர்களையும் கலந்துகொள்ளுமாறும், தமிழ் மக்களின் குரலாக கருதியே தாம் பூரண ஆதரவினை வழங்குவதாகவும், எதிர்மறையான, காழ்புணர்வுகளை கடந்து அனைவரும் இதில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.