குண்டுத் தாக்குதலால் உறவுகளை இழந்த 200 சிறுவர்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 9, 2019

குண்டுத் தாக்குதலால் உறவுகளை இழந்த 200 சிறுவர்கள்!



ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் சுமார் 253 பேர் கொல்லப்பட்டனர். ஐந்நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலின் விளைவாக, சுமார் 200 குழந்தைகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர்.

அவர்களில் சிலர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் என்று கொழும்பு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ கொழும்பில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலினால், 200 சிறுவர்கள் தங்களின் குடும்பத்தினரை இழந்துள்ளனர்.

மேலும் சிலர், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

75-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள், படு காயம் அடைந்துள்ளதால் அவர்களால் தங்களின் குடும்பத்தைச் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். படுகாயமடைந்தவர்களில் பலர், தங்களின் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.

அதனால், அவர்களின் மொத்த வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், பலருக்கு ஏற்பட்ட பலத்த காயத்தினால் வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.


குண்டுவெடிப்பை நேரில் பார்த்தவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், குண்டு வெடிப்பில் சிக்கி மீண்டவர்கள் என நூற்றுக்கணக்கானவர்களுக்கு உளவியல் முதலுதவி தேவைப்படுகிறது.

அவர்கள் இன்னும் அந்தத் தாக்கத்திலிருந்து வெளிவரவில்லை. தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலரும், தங்கள் வாழ்வை எதிர்கொள்ள பல சவால்களைச் சந்தித்து வருகின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.