இன்று இலங்கையில் தொடர் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுவரும் இந்நிலையில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலினால் படுகாயமடைந்து போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளோர் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 30 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 120பேர் வரையிலும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இவ் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும் காயமடைந்தவர்களின் பெயர் விபரங்களையும் வெளியிட்டுள்ளனர்.