வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 182 பேர் வெளியேறினர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, October 2, 2020

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 182 பேர் வெளியேறினர்!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 182 பேர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


அந்தவகையில் ஜோர்தானிலிருந்து அழைத்துவரப்பட்ட 182 பயணிகள் வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.


அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தநிலையில், அவர்களது சொந்த இடங்களான மாத்தறை, கொழும்பு, குருநாகல், கண்டி போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.


குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை வவுனியா மாவட்டத்தில் வேலங்கும் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் ஆயிரத்து 102 பேருக்கு மேற்பட்டோர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.